கல்லாங் ரிவரில் நேற்று பிப். 28 அன்று காலை 35 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அவர் மீண்டும் மீண்டும் ஆற்றில் நுழைய முயன்ற குற்றத்திற்காக கைது செய்யப்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது.
காலை 6 மணியளவில் அந்த பெண் ஆற்றில் மிதப்பதை சக ஊழியர் பார்த்ததாகவும், உடனடியாக காவல்துறையை உதவிக்கு அழைத்ததாகவும் கல்லாங் ஆற்றின் அருகே பணிபுரியும் ஒருவர் கூறினார்.
அதன் பின்னர் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் (SCDF) சிங்கப்பூர்க் காவல் படை அதிகாரிகளும் அங்கு வந்து அந்த பெண்ணை கரைக்கு இழுத்து கொண்டு வந்தனர்.
ஆனால், அந்த பெண் ஸ்ட்ரெச்சரில் உட்கார மறுத்து தொடர்ந்து ரகளை செத்ததாகவும், இறுதியாக போலீஸ் அதிகாரிகள் கைவிலங்கிட்டு அழைத்துச் செல்ல முடிவு செய்ததாகவும் கூறப்பட்டுள்ளது.