சிங்கப்பூரில் வெளியானது ‘கண்ணை நம்பாதே’ திரைப்படம்!

Video Crop Image

திரைப்பட இயக்குநர் மு.மாறன் இயக்கத்தில் நடிகரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், நடிகை ஆத்மிகா ஆகியோர் நடித்துள்ள ‘கண்ணை நம்பாதே’ திரைப்படம், மார்ச் 17- ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

திண்டுக்கல்லில் இருந்து சிங்கப்பூருக்கு செல்லும் சின்ன வெங்காயம்!

இந்த திரைப்படத்தில், ஞானசம்பந்தம், பழ.கருப்பையா, மாரிமுத்து, சுபிக்ஷா, சதீஷ், சென்ராயன், ஆதிரா உள்ளிட்ட திரைப் பிரபலங்களும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சித்துக்குமார் பின்னணி இசையைக் கொடுக்க, ஜலந்தர் வாசன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

“சசிகுமார் நடிப்பில் வெளியாகியுள்ள ‘அயோத்தி’ திரைப்படத்தின் கதை என்னுடையது”- சிங்கப்பூர் சரவணன்’ நாவலாசிரியர் மில்லத் அகமது குற்றச்சாட்டு!

‘கண்ணை நம்பாதே’ திரைப்படம் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அத்துடன், படம் முழுக்க க்ரைம் ஸ்டோரி என்பதால், அப்படத்திற்கு கூடுதல் சிறப்பு. சிங்கப்பூரில் ‘Carnival Cinema Golden Mile Tower’, ‘Cathay West Mall’ ஆகிய இரு திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த படத்தை சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் ஆர்வமுடன் கண்டுக்களித்து வருகின்றனர்.