சிங்கப்பூர் திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவினர் மற்றும் இந்து அறக்கட்டளை வாரியமும் இணைந்து வழங்கும் ‘கண்ணப்ப நாயனார்’ இசை நாடக நிகழ்ச்சி.
இந்த இசை நாடக நிகழ்ச்சியில் பாடகர்களாக திருமுறை மாநாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற செல்வி ஹர்ஷிதா பாலாஜி, செல்வி தனுஸ்ரீ வெங்கடேஷ், செல்வன் நவீன் நாகராஜன் மற்றும் செல்வன் ஹரிதாஸ் மூர்த்தி ஆகியோர் பங்கு பெற இருக்கின்றனர்.
இந்நிகழ்ச்சியில் துணை இசை கலைஞர்களாக வயலின் வாசிப்பு மணிகண்டன் மற்றும் மிருதங்கம் வாசிப்பு தேவராஜன்.
நாடகம் நடைபெறும் நாள்: ஆகஸ்ட் 04 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 2019.
தொடங்கும் நேரம்: சரியாக மாலை 6 மணி.
நடைபெறும் இடம்: பி.ஜி.பி மண்டபம் சிராங்கூன் சாலை, சிங்கப்பூர்.
நாடகத்தை கண்டு மகிழ உங்களை அன்போடு அழைக்கிறது, சிங்கப்பூர் திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவினர் மற்றும் இந்து அறக்கட்டளை வாரியம். அனுமதி இலவசம்!