சிங்கப்பூரின் கெப்பல் துறைமுகத்தில் கப்பலில் இருந்து கிரேன் விழுந்ததில் அருகிலுள்ள கப்பலில் பணிபுரிந்த ஊழியர்கள் காயமடைந்தனர்.இரு ஊழியர்கள் கடலில் விழுந்து ஒருவர் மீட்கப்பட்ட நிலையில் மற்றொருவர் காணவில்லை.
காணாமல் போனவரை தேடும் பணி தீவிரமாக்கப்பட்ட து.வேலை பார்த்துக் கொண்டிருந்த பங்களாதேஷைச் சேர்ந்த 38 வயது ஊழியர்தான் கடலில் விழுந்து காணாமல் போனதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.சிங்கப்பூர் கடலோரக் காவல்படை,குடிமைத் தற்காப்புப் படை ஆகியவை மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.
கிரேன் விபத்தில் நான்கு பேர் லேசான காயங்களுடன் தப்பித்தனர்.பட்டறையில் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
நேற்று பிற்பகல் காணமல் போனதாக அறிவிக்கப்பட்ட ஊழியர் இன்று சடலமாக கடலிலிருந்து மீட்கப்பட்டார்.இந்த விபத்து சிங்கப்பூரின் பணியிட மரணங்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது.