விதிமுறைகளை மீறி செயல்பட்ட KFC உணவகத்திற்கு வெள்ளிக்கிழமை (மார்ச் 4) S$3,000 அபராதம் விதிக்கப்பட்டது.
ஃபார் ஈஸ்ட் பிளாசா (Far East Plaza) கடையில் உள்ள அதன் உணவகம், வாடிக்கையாளர்கள் இரண்டு நபர்கள் கொண்ட குழுக்களாக இருப்பதை உறுதி செய்யத் தவறியதாக கூறப்பட்டுள்ளது.
கோவிட்-19 கட்டுப்பாட்டு உத்தரவை மீறியதாக, அந்நிறுவனத்தை பிரதிநிதித்த நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
மேலும், இது தொடர்புடைய இரண்டாவது குற்றச்சாட்டு கவனத்தில் கொள்ளப்பட்டது.
இந்த சம்பவம் ஜூலை 10, 2021 அன்று இரவு நடந்ததாக கூறப்பட்டுள்ளது.
அப்போது 2 பேர் மட்டுமே ஒன்றாக அமர்ந்து சாப்பிட முடியும் என்ற நடைமுறை நடப்பில் இருந்தது குறிப்பிடத்தக்கது.