கத்தியால் குத்திக்குவேன்! – பள்ளிக்கு வெளியே நின்று தன்னைத்தானே குத்திய பெண் கைது!

சிங்கப்பூரின் தெம்பனிஸ் வட்டாரத்தில் உள்ள செயின்ட் ஹில்டா மேல்நிலைப் பள்ளிக்கு வெளியே தன்னைத்தானே குத்திக்கொண்ட பெண் ஆபத்தான கத்திகளை வைத்திருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை ஒப்புகொள்ளப்போவதாகக் கூறியுள்ளார்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு செப்டம்பர்-19ஆம் தேதி மாலை 6.30 மணியளவில் தெம்பனிஸ் ஸ்டிரீட் 82-இல் சம்பவம் அரங்கேறியுள்ளது.ஜூலியானா அப்துல் காதர் என்ற பெண் தன்னைத்தானே குத்திகொண்டிருந்த போது அங்கு வந்த காவல்துறை அதிகாரிகளையும் கத்தியைக் காட்டி மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

பள்ளிக்கு வெளியே நின்று கொண்டு கத்தியைக் கொண்டு தனது வயிற்றில் குத்திக் கொண்டார்.பொது இடத்தில் ஆயுதத்தை வைத்திருக்கும் பெண்ணைக் கண்டித்து கத்தியைக் கீழே போடும்படி அதிகாரிகள் உத்தரவிட்டனர்.ஆனால்,ஜூலியானா அதைப் பொருட்படுத்தாமல் அதிகாரிகளை மிரட்டினார்.

தன்னைத்தானே மேலும் கத்தியால் குத்திக்கொள்ளப் போவதாக அதிகாரிகளை மிரட்டியதாகக் கூறப்படுகிறது.அதிகாரி ஒருவர் taser எனப்படும் மின்னதிர்வுக் கருவியைப் பயன்படுத்தி ஜூலியானாவைக் கைதுசெய்தார். 21 செண்டிமீட்டர் நீளமான கத்தியும் 13 செண்டிமீட்டர் பேனாக் கத்தியும் அவர் வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.