கிராஞ்சியில் வனப்பகுதியை சட்டவிரோதமாக அகற்றியதில் தொடர்புடைய இருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
அதாவது, JTC கார்ப்பரேஷன் அதிகாரி மற்றும் அவரது அப்போதைய மேற்பார்வையாளருக்கும் இன்று புதன்கிழமை (நவம்பர் 9) நீதிமன்றம் அபராதம் விதித்தது.
சிங்கப்பூர் ஆயுதப்படை வாகனம், டாக்ஸி மோதி விபத்து – இருக்கையில் சிக்கி உயிருக்கு போராடிய ஓட்டுநர்
47 வயதான முன்னாள் JTC துணை இயக்குனர் சோங் புய் சிஹ் மற்றும் அவருக்கு கீழ் பணிபுரிந்த 44 வயதான நியோ ஜெக் லின்னுக்கு தலா S$30,000 அபராதம் விதிக்கப்பட்டது.
இருவரும் அவர்கள் மீது சாட்டப்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை கடந்த வாரம் ஒப்புக்கொண்டனர். நியோ JTCயில் மூத்த திட்ட மேலாளராக இருந்தார், தற்போது அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கிராஞ்சி குளோஸ் மற்றும் கிராஞ்சி சாலையில் உள்ள வேளாண்-உணவு கண்டுபிடிப்பு பூங்காவின் வளர்ச்சி நிலத்துக்கு இவர்கள் இருவரும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டு இருந்தனர்.