சிங்கப்பூரில் தேசிய தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, 16 வீராசாமி சாலையில் உள்ள ‘Krsna’s Free Meals’, புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சூடான உணவுகளையும், குளிர்பானங்களையும் மற்றும் மொபைல் கிரிப் கவர்கள், துண்டுகள் அடங்கிய கிஃப்ட் பேக்குகளையும் வழங்கியுள்ளது.
சிங்கப்பூரில் புதிய வேலை அனுமதிக்கான விண்ணப்பங்கள்… செப். 1 முதல் இது கட்டாயம்
இதனை நேரில் வந்து நீண்ட வரிசையில் நின்று பெற்றுக் கொண்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உற்சாகமடைந்தனர். ‘Kailash Parbhat’ மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர் மையம் (Migrant Workers’ Centre) ஆகியவற்றுடன் இணைந்து ‘Krsna’s Free Meals’ இத்தகைய உணவுகளை வழங்கியுள்ளது.
கிளிமஞ்சாரோ மலையில் ஏற முயன்ற சிங்கப்பூரர் மரணம்
சிங்கப்பூரில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பல்வேறு தன்னார்வலர்களும், தன்னார்வ அமைப்புகளும் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.