சிங்கப்பூரின் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
ஐந்து நாள் பயணமாக, இன்று சனிக்கிழமை (செப். 17) முதல் புதன்கிழமை வரை இந்தியாவில் இருப்பார் என கூறப்பட்டுள்ளது.
பெண்ணிடம் தன் பிறப்புறுப்பை வெளிக்காட்டிய 36 வயதுமிக்க ஊழியர் கைது
துணைப் பிரதமர் என்ற அடிப்படையில் அவர் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதல் அதிகாரபூர்வ பயணம் இதுவாகும்.
புது தில்லியில் நடைபெறும் இந்தியா-சிங்கப்பூர் அமைச்சக வட்டமேசை (ISMR) தொடக்க விழாவில் திரு வோங் பங்கேற்பார் என்று பிரதமர் அலுவலகம் (PMO) தெரிவித்துள்ளது.
இந்த பயணத்தின்போது, இந்திய மூத்த தலைவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களையும் அவர் சந்திப்பார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.