சிங்கப்பூருக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள லித்துவேனியா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் கேப்ரியலியஸ் லாண்ட்ஸ்பெர்கிஸ் (Lithuanian Foreign Minister Gabrielius Landsbergis) நேற்று (07/02/2022) மதியம் சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணனை நேரில் சந்தித்துப் பேசினார். முன்னதாக, லித்துவேனிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் மதிய விருந்தளித்தார்.
Credit Suisse வங்கியால் தனக்கு 1 மில்லியன் டாலருக்கு மேல் நஷ்டம்; நீதிமன்றத்தில் மூதாட்டி வழக்கு.!
இச்சந்திப்புக் குறித்து சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “நண்பரான லித்துவேனிய வெளியுறவு அமைச்சர் கேப்ரியலியஸ் லாண்ட்ஸ்பெர்கிஸை இன்று (07/02/2022) சிங்கப்பூருக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
கடந்த செப்டம்பரில் நியூயார்க்கில் நடந்த சந்திப்பிற்குப் பிறகு அவர் எனது அழைப்பை ஏற்றுக்கொண்டு முதல் வெளிநாட்டு பயணமாக லித்துவேனிய வெளியுறவுத்துறை அமைச்சர் சிங்கப்பூர் வந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
வாட்ஸ்அப் குரூப்பில் குழந்தைகள் ஆபாச வீடியோ: சிங்கப்பூரில் வெளிநாட்டவருக்கு சிறை.!
அமைச்சர் லாண்ட்ஸ்பெர்கிஸும், நானும் அந்தந்த பிராந்தியங்களில் முக்கிய சக்திகளின் பங்கு உட்பட பிராந்திய மற்றும் உலகளாவிய அபிவிருத்திகள் குறித்து விவாதித்தோம். லித்துவேனியா தனது முதல் தென்கிழக்கு ஆசிய தூதரகத்தை சிங்கப்பூரில் நிறுவும் முடிவையும் நான் வரவேற்றேன்.
சிறிய மாநிலங்களாக, சிங்கப்பூர் மற்றும் லித்துவேனியா ஆகியவை தடையற்ற வர்த்தகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் பலதரப்பு ஆகியவற்றில் ஒரே மாதிரியான கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கின்றன. டிஜிட்டல் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மக்களிடையேயான பரிமாற்றம் உள்ளிட்ட துறைகளில் எங்களது ஒத்துழைப்பை வலுப்படுத்த அமைச்சர் லாண்ட்ஸ்பெர்கிஸுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்க்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.