லிட்டில் இந்தியாவில் சிறுமியை நாசம் செய்ததாக சிக்கிய மதுக்கடை உரிமையாளர்

liquor-rules-amendment jan.2 2024

லிட்டில் இந்தியாவில் உள்ள மதுக்கடை உரிமையாளர் தன்னிடம் பணிபுரிந்த 17 வயது சிறுமியை நாசம் செய்ததாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது.

சிங்கப்பூர் சிறுமியர் இல்லத்தை விட்டு தப்பி ஓடியதாக சொல்லப்படும் அந்த சிறுமியை ராஜ் குமார் பாலா (41) என்ற அவர் நாசம் செய்ததாக கூறப்படுகிறது.

“பாஸ்போர்ட், ஒர்க் பெர்மிட்டை காட்டு” – பணிப்பெண்ணை நாசம் செய்த வெளிநாட்டு ஊழியருக்கு 18 ஆண்டு தடுப்பு காவல், 12 பிரம்படி

2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 21 இரவு முதல் பிப்ரவரி 22 அதிகாலை வரை வாடகை வீட்டில் வைத்து சிறுமியை அவர் பலாத்காரம் செய்ததாக வழக்கறிஞர்கள் வாதிடுகின்றனர்.

பாதிக்கப்பட்டதாக சொல்லப்படும் அந்த சிறுமிக்கு தற்போது 20 வயது ஆகிறது.

ராஜ்குமார் குற்றம் செய்ததை நிரூபிக்க 13 சாட்சிகள் இருப்பதாக அரசாங்க வழக்கறிஞர்கள் கூறினர்.

நீதிமன்ற ஆவணங்களின் படி, B1 என அடையாளம் காணப்பட்ட சாட்சி ஒன்றும் அதில் அடங்கும்.

இவரும் Dunlop ஸ்ட்ரீட்டில் உள்ள ராஜ் குமாரின் பாரில் வேலை செய்து அந்த வாடகை வீட்டில் தங்கியிருந்த சாட்சி என கூறப்படுகிறது.

சிறுமியை ராஜ் குமார் நாசம் செய்ததை B1 நேரில் கண்டதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

பாலியல் குற்றம் நிரூபிக்கப்பட்டால், 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் அல்லது பிரம்படி விதிக்கப்படலாம்.

சிறுமியை மானபங்கப்படுத்திய குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் மற்றும் பிரம்படி விதிக்கப்படலாம்.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

சிங்கப்பூரில் வீண் வேலையில் ஈடுபட்டு பிடிபட்ட 49 பேர்