லிட்டில் இந்தியா ரயில் நிலையத்தில் பெண்ணிடம் சில்மிஷம் செய்த நபர் – மடக்கி பிடித்த போலீஸ்

Little India MRT station

லிட்டில் இந்தியா ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் மானபங்கம் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.

இதனை அடுத்து புகார் அளிக்கப்பட்ட இரண்டு மணி நேரத்திற்குள் 53 வயது ஆடவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

வெளிநாட்டு ஊழியர் மரணம் – ஜனவரியில் மட்டும் 3 பேர்… தொடரும் சோகம்

கடந்த ஜனவரி 31ஆம் தேதி மதியம் 2.30 மணியளவில் போலீசாருக்கு தகவல் கிடைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர் விசாரணைகள் மற்றும் கேமராக்களின் உதவியுடன், அதிகாரிகள் அந்த நபரின் அடையாளத்தை கண்டறிந்தனர்.

இதனை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இது குறித்த விசாரணைகள் நடந்து வருகின்றன.

அந்த நபர் மீது பிப்ரவரி 2ஆம் தேதி நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது.

நான்கு வாகனங்கள் மோதி விபத்து: வெளிநாட்டு ஊழியர்கள் உள்ளிட்ட 8 பேர் மருத்துவமனையில் அனுமதி