சிங்கப்பூரர்களே! அவர்களுக்கு ஆதரவளியுங்கள்! – நடைபாதை வியாபாரிகளுக்கு ஆதரவாக பலகையை ஏந்திய MP

louis ng support AGC singapore facebook
நீ சூன் ஜிஆர்சியின் மக்கள் செயல் கட்சி (பிஏபி) நாடாளுமன்ற உறுப்பினர் (MP) லூயிஸ் என்ஜி, அனுமதியின்றி வியாபாரிகளுக்கு ஆதரவாக பலகையை வைத்திருந்ததற்காக அவர் மீது மேலும் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று (AGC) அட்டர்னி ஜெனரல் அறை காவல்துறைக்கு ஆணையிட்டது.
Covid-19 பரவலினால் அனைத்து துறைகளும் மூடப்பட்ட போது வியாபாரிகளுக்கு ஆதரவாக ஜூன் 2020 இல் பலகையில் #Support them என்று எழுதி அவரது ஆதரவை தெரிவித்தார்.முறையான அனுமதி பெறாமல் பலகையை வைத்ததற்காக கைது செய்யப்பட்டார்.
தற்போது அவர் மீதான விசாரணைகள் முடிந்து விட்டதாக AGC-இன் செய்தித்தொடர்பாளர் கூறினார்.விசாரணையில் தொற்றுநோய் பரவலின்போது அவரது தொகுதியில் உள்ள நடைபாதை வியாபாரிகளுக்காக ஆதரவை வெளிப்படுத்தியதன் மூலம் அவரது கடமையை நிறைவேற்றியது தெரியவந்துள்ளது.

செயலின் தன்மை மற்றும் செய்யும் நபரின் நோக்கம் குற்றத்தை நிகழ்த்தியுள்ளதா என்பதை தீர்மானிப்பது அவசியம்.எனவே,பொது ஒழுங்கு சட்டத்தின்கீழ் என்ஜி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று AGC உத்தரவிட்டுள்ளது.
ஜூன் 20, 2020 அன்று அவரது வழக்கமான நடைபயணத்தின் போது Yishun Park Hawker Centerக்குச் சென்றார். Covid-19 கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படுவதால்,வியாபாரிகளுக்கு ஆதரவளிக்குமாறு அவர்களின் புகைப்படங்களை முகநூலில் பதிவேற்றி சிங்கப்பூரர்களை வலியுறுத்தினார்.
பலகையை உயர்த்தி பிடித்துக் கொண்டு Ng வியாபாரிகளுக்கு அருகில் நின்றார். ஒரு வாக்குமூலத்தை வழங்குமாறு காவல்துறை அவரிடம் கேட்டதாக என்ஜி கூறினார்.மார்ச் 2021-இல் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.