நீர்த்தேக்கத்தில் கண்டெடுக்கப்பட்ட சடலம்! – இறந்தவரின் பாலினம் மற்றும் பெயர் வெளியிடப்படாத நிலை

lower-seletar-reservoir-park-body

சிங்கப்பூரில் உள்ள லோயர் செலிட்டர் நீர்த்தேக்கப் பூங்காவில் அக்டோபர் 5 ஆம் தேதி,புதன்கிழமை அதிகாலையில் ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டது.

அதிகாலை 6:25 மணியளவில் SCDF படைக்கு அழைப்பு வந்ததாக கூறப்படுகிறது.ஆனால்,SCDF அங்கு விரைந்தவுடன் அந்த நபரின் எந்த அடையாளமும் இல்லை.

(DART) பேரிடர் உதவி மற்றும் மீட்புக் குழுவின் டைவர்ஸ் நீர்த்தேக்கத்தில் சடலத்தை தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.நீருக்கு அடியில் சென்று சடலத்தைத் தேடத் தொடங்கினர்.

தீவிர தேடுதல் வேட்டைக்குப் பின்னர் நீர்த்தேக்கத்தின் கரையில் இருந்து சுமார் 20 மீட்டர் தொலைவில் ஒரு உடலை அவர்கள் மீட்டனர்.SCDF உடன் வந்த துணை மருத்துவர் உடலை பரிசோதித்தார்.பின்னர் அந்த நபர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.

இறந்தவரின் பெயர் மற்றும் பாலினம் வெளியிடப்படவில்லை.மரணத்தின் பின்னணியில் குற்றவியல் காரணங்கள் ஏதேனும் உள்ளதா போன்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.