லக்கி பிளாசாவில் சண்டை- மூன்று பேரை கைது செய்தது காவல்துறை!

Photo: Fabrications About Singapore Official Facebook page

மார்ச் 19- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு 08.30 மணியளவில் சிங்கப்பூரில் உள்ள லக்கி பிளாசாவில் (Lucky Plaza) ஆண்கள் மற்றும் பெண்கள் இடையே சண்டை ஏற்பட்டது. சண்டையிட்டுக் கொண்ட ஐந்து ஆண்களின் வயது 31 வயதுக்கும், 63 வயதுக்கும் இடைப்பட்டிருக்கும். பெண்களில் ஒருவருக்கு 41 வயது என்றும், மற்றொருவருக்கு 44 வயது என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீ ராமர் கோயிலில் நடந்த மஹா சண்டி யாகம்…. ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

இந்த சம்பவத்தை காவல்துறையினர் நேரில் கண்ட நிலையில், சமாதானப்படுத்த முற்பட்டனர். அதையும் மீறி சண்டை தொடர்ந்த நிலையில், பொது இடத்தில் சண்டையிட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக, 31 வயதும், 37 வயதும் கொண்ட இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அதேபோல், 52 வயது மதிக்கத்தக்க நபரும் சண்டைப் போட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் கடத்திக் கொண்டு வரப்பட்ட 4 அரிய வகை குரங்குகள் பறிமுதல்!

மற்றவர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லக்கி பிளாசாவில் சண்டையிட்டுக் கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.