ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் (Air India Express), மதுரை, சிங்கப்பூர் இடையே இரு மார்க்கத்திலும் தொடர்ந்து நேரடி விமான சேவைகளை வழங்கி வருகிறது. எனினும், வாரத்தில் செவ்வாய்க்கிழமை, வியாழன்கிழமை, சனிக்கிழமை ஆகிய மூன்று நாட்கள் மட்டும் விமான சேவைகளை விமான நிறுவனம் வழங்கி வருகிறது.
மித மிஞ்சிய விளைச்சல் – துரியன் விற்பனை விலை வீழ்ச்சி.. இப்போதே முந்துங்கள்
மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு IX 684 என்ற விமானத்தையும், சிங்கப்பூரில் இருந்து மதுரைக்கு IX 683 என்ற விமானத்தையும் இயக்கி வருகிறது. இந்த வழித்தட விமான சேவைக்கான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
விமான பயண அட்டவணை மற்றும் பயண டிக்கெட் முன்பதிவு உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.airindiaexpress.in/en என்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் என ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
செமேரு எரிமலை வெடித்தது…. சிங்கப்பூரர்களுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்!
கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என அடுத்தடுத்துப் பண்டிகை நாட்கள் வரவுள்ள நிலையில், மதுரை, சிங்கப்பூர் இடையே கூடுதல் விமான சேவையை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.