ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் (Air India Express), தமிழகத்தின் சென்னை, மதுரை, திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு இரு மார்க்கத்திலும் நேரடி மற்றும் தினசரி விமான சேவையைத் தொடர்ந்து வழங்கி வருகிறது. குறிப்பாக, மதுரை மற்றும் சிங்கப்பூர் இடையே விமான நிறுவனம் வழங்கி வரும் விமான சேவைகள் குறித்து விரிவாகப் பார்ப்போம்.
குழந்தையின் தலையில் பலத்த அடி ! – நாற்காலியில் இருந்து விழுந்த குழந்தை மயக்கநிலை
மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு IX 684 என்ற விமானத்தையும், சிங்கப்பூரில் இருந்து மதுரைக்கு IX 683 என்ற விமானத்தையும் இயக்கி வருகிறது. வாரத்தில் செவ்வாய்கிழமை, வியாழன்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய மூன்று நாட்களில் விமான சேவையைத் தொடர்ந்து வழங்கி வருகிறது.
செல்ல நாயைத் தேடும் ஜோடி! – பாதுகாப்பாக கண்டுபிடித்துத் தருபவர்களுக்கு காத்திருக்கும் வெகுமதி!
இந்த வழித்தட விமான சேவைக்கான அக்டோபர் முதல் அடுத்தாண்டு ஜனவரி மாதம் வரையிலான விமான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விமான பயண அட்டவணை மற்றும் விமான பயண டிக்கெட் முன்பதிவு உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.airindiaexpress.in/en என்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.