மதுரை, சிங்கப்பூர் இடையே தொடர்ந்து இரு மார்க்கத்திலும் நேரடி விமான சேவையை வழங்கி வருகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ். மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு IX 684 என்ற விமானமும், சிங்கப்பூரில் இருந்து மதுரைக்கு IX 683 என்ற விமானமும் இயக்கப்பட்டு வருகிறது. வாரத்தில் செவ்வாய்க்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் மட்டும் இந்த விமான சேவையை வழங்கி வருகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம்.
இரண்டு நாட்கள் காணாமல் போன நாய்க்குட்டி – அடர்ந்த காட்டிற்குள் இருந்து எவ்வாறு மீட்கப்பட்டது ?
இந்த வழித்தட விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக, ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விமான பயண அட்டவணை, பயண டிக்கெட் முன்பதிவு உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.airindiaexpress.in/en என்ற இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் திருச்சி, மதுரை, சென்னை ஆகிய நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் விமான சேவையை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.