இந்தியாவின் மதுரை, திருச்சி, சென்னை ஆகிய நகரங்களில் சிங்கப்பூருக்கு இருமார்க்கத்திலும் விமான சேவையை வழங்கி வருகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம்.
சிங்கப்பூர்-திருச்சி விமானம் தாமதம்: தொடரும் தாமதம், காரணம் தான் என்ன?
குறிப்பாக, மதுரை, சிங்கப்பூர் இடையே இருமார்க்கத்திலும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் விமான சேவையை வழங்கி வருகிறது. மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு IX 684 என்ற விமானமும், சிங்கப்பூரில் இருந்து மதுரைக்கு IX 683 என்ற விமானமும் இயக்கி வருகிறது. வாரத்தில் சனிக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் விமான சேவையை வழங்கி வருகிறது.
இந்த வழித்தட விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக, சொல்லவேண்டுமென்றால் ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு நடைபெற்று வருகிறது. இது தொடர்பான, கூடுதல் விவரங்களுக்கு https://www.airindiaexpress.in/en என்ற இணைய இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.