நெருங்கும் தீபாவளி பண்டிகை: ‘மதுரை- சிங்கப்பூர் இடையே தினசரி விமான சேவை’- அதிரடி அறிவிப்பை வெளியிட்டது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்!

Photo: Air India Express Official Twitter Page

 

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், பயணிகளின் வசதிக்காக மதுரை, சிங்கப்பூர் இடையே இரு மார்க்கத்திலும் நேரடி மற்றும் தினசரி விமான சேவை வழங்கப்படும் என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

கனரக வாகனம், லாரி விபத்து.. இரண்டு ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதி

அதன்படி, வரும் அக்டோபர் 22- ஆம் தேதி முதல் மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கும், சிங்கப்பூரில் இருந்து மதுரைக்கும் தினசரி விமான சேவையை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் வழங்கவுள்ளது. இதையடுத்து, இந்த வழித்தட விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நெருங்கும் தீபாவளி பண்டிகை: 'மதுரை- சிங்கப்பூர் இடையே தினசரி விமான சேவை'- அதிரடி அறிவிப்பை வெளியிட்டது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்!
Photo: Air India Express Website

சிங்கப்பூர்- மதுரை, மதுரை- சிங்கப்பூர் வழித்தடத்திற்கான அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்திற்கான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://www.airindiaexpress.com/home என்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவறான முறையில் சம்பாதிப்பு உள்ளிட்ட சட்டவிரோத செயல்… சிக்கிய 97 பேர்

மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு தினசரி விமான சேவை வழங்கப்படும் என்ற அறிவிப்பு, சிங்கப்பூர் வாழ் தமிழர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.