சிங்கப்பூரில் “மகா சிவராத்திரி விழா” – இரு நாட்களுக்கு மூடப்படும் சாலை

Sri-Sivan-Temple-

சிங்கப்பூரில் மகா சிவராத்திரியை முன்னிட்டு கெய்லாங் ஈஸ்ட் அவென்யூ 2ல் உள்ள கெயிலாங் ஈஸ்ட் சென்ட்ரல் மற்றும் கெய்லாங் ஈஸ்ட் அவென்யூ 3க்கு இடைப்பட்ட சாலை பகுதி மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செவ்வாய் (மார்ச் 1) கொண்டாடப்பட உள்ள மகா சிவராத்திரியை முன்னிட்டு அன்று மாலை 5 மணி முதல் மறுநாள் காலை 5 மணி வரை வாகனப் போக்குவரத்துக்கு மேற்குறிப்பிட்ட சாலை மூடப்படும்.

சிங்கப்பூரில் இருந்து தமிழகம் திரும்பிய ஊழியர்.. கொலை செய்த கொடூர மகன் – சோகத்தில் குடும்பம்

இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இந்து பண்டிகையான மகா சிவராத்திரி விழாவை எளிதாக்கும் வகையில் இது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போலீசார் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தனர்.

இருப்பினும், அந்த மூடலின்போது ​​போலீஸ் மற்றும் பிற அவசரகால வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

இந்த மூடலில் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படாமல் இருக்க, வாகன ஓட்டிகளுக்கு உதவவும், வழிநடத்தவும், பாதிக்கப்பட்ட சாலையில் உதவி போலீஸ் அதிகாரிகள் நிறுத்தப்படுவார்கள்.

விதிமீறி இடையூறு ஏற்படுத்தும் வகையில் நிறுத்தப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்கள் தேவைப்படுவோர், 6743 4566 என்ற எண்ணில் ஸ்ரீ சிவன் கோவிலை தொடர்பு கொண்டு கூடுதல் விவரங்களை அறியலாம்.

“ஊழியரின் விரலை கடித்து துப்பிய சக ஊழியர்” – இந்திய நாட்டை சேர்ந்த ஊழியருக்கு சிறை