வீட்டுப் பணிப்பெண்கள் இருவரை பெண் ஒருவர் செந்தோசா கோவ் இல்லத்தில் துன்புறுத்தியதாக இரண்டு ஆண்டுகள் நீடித்த வழக்கு விசாரணைக்குப் பிறகு குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
திருமதி லிசார்டோ ஜோன் லோசரஸ் (35) மற்றும் திருமதி ஜெனிஃபர் வேகாஃப்ரியா அரங்கோட் (41) ஆகிய இரு பணிப்பெண்களை 58 வயதான டான் லீ ஹூன் என்ற பெண் துன்புறுத்தியுள்ளார்.
வெளிநாட்டு ஊழியர் பலி: லாரியில் ஏற்றப்பட்ட மரம் தாக்கி பரிதாப உயிரிழப்பு
இந்நிலையில், அந்த இரண்டு பிலிப்பைன்ஸ் பணிப்பெண்களை டான் தானாக முன்வந்து காயப்படுத்தியதாக ஏழு குற்றச்சாட்டுகள் நேற்று வெள்ளிக்கிழமை (டிசம்பர் 9) நிரூபணமானது.
2015ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் லோசரஸ் வேலைக்கு சேர்ந்தார், 2018 ஆகஸ்ட் ஜெனிஃபர் வேலைக்கு சேர்ந்தார்.
அடித்தும், கிள்ளியும் உதைத்தும் அவர்கள் துன்புறுத்தப்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டு இந்த சம்பவங்கள் வெட்டவெளிச்சம் ஆனது.
இரவில் கால் பிடித்து விட சொல்வதாகவும், முதலாளி தூங்கிய பின்பும் வேலை செய்ய சொல்வதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.