தமிழக முதலமைச்சருடன் மலேசிய நாட்டு அமைச்சர் சந்திப்பு!

Photo: Tamilnadu Chief Minister Mkstalin Official Twitter Page

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (27/09/2022) காலை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, மலேசியா நாட்டு உள் விவகாரத்துறை அமைச்சர் டத்தோ செரி ஹம்சா பின் சைனுதின் சந்தித்துப் பேசினார். இதில் தொழில் முதலீடுகள், வர்த்தகம் உள்ளிட்டவைக் குறித்து இருவரும் ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

சவூதி பல்பொருள் அங்காடியில் மாரடைப்பால் உயிரிழந்த தமிழர்!

இந்த நிகழ்வின் போது, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப., பொதுத்துறைச் செயலாளர் முனைவர் டி.ஜகந்நாதன் இ.ஆ.ப., சென்னையில் உள்ள மலேசிய நாட்டு தூதரகத்தின் துணைத் தூதர் முகமது பிர்தௌஸ் பின் ஜாபர், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஈ.ஆர்.ஈஸ்வரன், மரபு அலுவலர் முகமது கலிமுல்லா உசேன், டத்தோ எஸ்.பிரகதீஷ் குமார், டத்தோ வீரா நைனா முகமது சுல்தான், ராஜா மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.