சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய இரு நாடுகளின் தலைவர்கள் சந்திப்பு இன்று (30/01/2023) நடைபெறுகிறது. இந்த நிலையில், மலேசியா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் ஜாம்ப்ரி அப்துல் காதர் (Dr Zambry Abdul Kadir) மற்றும் அவரது மனைவி சரிபா சுல்கிஃப்லி (Saripah Zulkifli) ஆகியோர் நேற்று (29/01/2023) மாலையே சிங்கப்பூருக்கு வந்துள்ளனர். அவர்களுக்கு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மசாஜ் பார்லரில் பெண்ணை மானபங்கம் செய்ததாக ஆடவர் கைது
அதன் தொடர்ச்சியாக, சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், மலேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் ஜாம்ப்ரி அப்துல் காதர் மற்றும் அவரது மனைவி சரிபா சுல்கிஃப்லி ஆகியோருக்கு தனது இல்லத்தில் இரவு விருந்து அளித்து உபசரித்தார். இதில், அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணனின் மனைவி பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் முதல் அரசுமுறை வெளிநாட்டு பயணமாக சிங்கப்பூருக்கு இன்று (30/01/2023) வந்துள்ளார். அவரை சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் வரவேற்றார். மலேசிய பிரதமருடன் அந்நாட்டின் போக்குவரத்துத்துறை, வர்த்தகம் மற்றும் தொழில்துறை, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் உள்ளிட்டோரும் சிங்கப்பூருக்கு வருகை தந்துள்ளனர்.