மலேசியாவில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் கடந்த மே 2 அன்று மின்னல் தாக்கி உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுங்கை ஜரோமில் உள்ள கம்போங் செரி சீடிங் (Kampung Seri Cheeding) அருகே இந்த சம்பவம் நடந்தது.
பாஸ்போர்ட் இல்லாமல் வெளியேறலாம்.. சிங்கப்பூர் வரும் பயணிகளுக்கு இனி எல்லாமே ஈஸி தான்
இந்த சம்பவம் நடந்தபோது அந்த ஊழியர் தொழிற்சாலை வேலைக்குச் சென்று கொண்டிருந்ததாக தி ஸ்டார் கூறியுள்ளது. அவருக்கு வயது 50 ஆகும்.
மின்னல் தாக்கியதில் ஊழியர் தனது பைக்கில் இருந்து கீழே விழுந்தார் என்று நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
பின்னர் வழிப்போக்கர்கள் அவரை சாலையின் ஓரத்தில் தூக்கிச் சென்று அவசர சேவையை அழைத்தனர். ஆனால் அவர் இறந்தது பின்னர் உறுதி செய்யப்பட்டது.
மின்னல் தாக்கியதால் சாலையில் இரண்டு பள்ளங்கள் ஏற்பட்டன. இது காண்போருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.