மலேசியாவில் துணி காயவைக்கும் ரேக் பின்னால் சுய-இன்பத்தில் ஈடுபட்ட ஆடவர் ஒருவர் கையும் களவுமாக பிடிபட்டார்.
அந்த ரேக்கில் இருந்த உள்ளாடையை வாயில் வைத்து இந்த காரியத்தில் அவர் ஈடுபட்டது வீடியோவில் படமாக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் 100 நாட்களுக்கு மேலாக தமிழக ஊழியரை காணவில்லை; மீட்டுத்தர மத்திய அரசிடம் கோரிக்கை!
இந்த சம்பவம் அடங்கிய வீடியோ சீன Facebook குழுவில் கடந்த மார்ச் 14 அன்று பதிவேற்றப்பட்டது.
இந்நிலையில், தவறான இந்த நடத்தை வழக்கில் தொடர்புடைய 62 வயதுடைய அந்த ஆடவரை கைது செய்ததாகக் கோலாலம்பூர் காவல்துறை கூறியது.
சிலாங்கூர் மாநிலம் புச்சோங்கைச் சேர்ந்த அந்த ஆடவரிடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது. Jalan Klang Lamவில் உள்ள ஸ்ரீ சென்டோசாவில் இந்த சம்பவம் நடந்ததாகவும் காவல்துறை கூறியது.
பின்னர் மார்ச் 16 அன்று வெளியிடப்பட்ட 2வது காவல்துறை அறிக்கையில், அந்த ஆடவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும், RM3000 (S$973) அபராதம் அல்லது ஒரு மாத சிறைத்தண்டனையை எதிர்கொள்வதாகவும் காவல்துறை கூறியது.
ஆனால், அந்த ஆடவர் அபராதத்தை செலுத்தாததால், சிறை தண்டனையை அனுபவித்து வருகிறார்.