சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சரைச் சந்தித்த மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர்!

Photo: Minister Vivian Balakrishnan Official Facebook Page

சிங்கப்பூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மலேசியா நாட்டின் பினாங்கில் (Penang) உள்ள பெர்மாடாங் பாவ் (Permatang Pauh) தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் புவான் நூருல் இஸ்ஸா அன்வர் ( Nurul Izzah Anwar) இன்று (07/12/2021) சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணனை நேரில் சந்தித்துப் பேசினார்.

கொரோனா விதிமீறல்- பிரபல உணவு நிலையத்தில் அமர்ந்து உணவருந்த 10 நாட்களுக்கு தடை!

இச்சந்திப்பு குறித்து சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “மலேசியாவின் பினாங்கில் உள்ள பெர்மாடாங் பாவ் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் யாங் பெர்ஹார்மட் (YB) புவான் நூருல் இஸ்ஸா அன்வாருடன் (Yang Berhormat (YB) Puan Nurul Izzah Anwar) சந்திப்பதில் மகிழ்ச்சி. நாங்கள் கடைசியாக கடந்த 2019- ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் YB நூருல் இஸ்ஸா தொகுதியில் நான் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது சந்தித்தோம். அப்போது அவர் விருந்தளித்தார். S R நாதன் பால்லோஷிப்பின் (S R Nathan Fellowship) கீழ் YB நூருல் இஸ்ஸா சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் நான்கு நாள் அரசுமுறை பயணமாக நேற்று (06/12/2021) சிங்கப்பூருக்கு வந்த நிலையில், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார். பின்னர், சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு டிசம்பர் 9- ஆம் தேதி அன்று மலேசியா திரும்புகிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.