மலேசிய நாட்டில் குறிப்பிட்ட துறையில் கடுமையான ஊழியர் பற்றாக்குறை நிலவுவதாக சொல்லப்பட்டுள்ளது.
அதாவது மருத்துவமனை, மருந்தகங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு அதிக அளவில் ஊழியர்கள் தேவை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், அதனை தீர்க்க தேவையான சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மலேசிய சுகாதார அமைச்சர் ஸலிஹா முஸ்தபா தெரிவித்தார்.
மருத்துவர்கள் மற்றும் தாதியர்களும் அங்கு தேவை இருப்பதாக அவர் தெரிவித்தார்.
மலேசிய நாட்டை சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், அவர்கள் சொந்த நாட்டுக்கு திரும்பி வந்து பணி செய்ய வேண்டும் என அந்நாட்டு சுகாதார அமைச்சகம் ஊக்குவிக்கிறது.