தன் குடும்பத்தில் ஒருவராக நீண்ட நாட்கள் பணியாற்றிய பணிப்பெண் ஒருவருக்கு மலேசியாவில் உள்ள குடும்பம் பிரியா விடை கொடுத்தது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பல வெளிநாட்டு ஊழியர்கள் வேலைக்காக வெளிநாடுகளுக்கு வருவதுண்டு போவதுண்டு, ஆனால் ஒரு சிலரே முதலாளிகளுக்கு மிக நெருக்கமான இடத்தை பிடிக்கின்றனர்.
வெளிநாட்டு ஊழியர் மரணம் – ஜனவரியில் மட்டும் 3 பேர்… தொடரும் சோகம்
அந்த வகையில் மலேசிய குடும்பம் ஒன்று சமீபத்தில் தங்கள் வீட்டில் உதவியாளராக இருந்த பணிப்பெண் சித்தியை பிரிய மனமில்லாமல் கதறியழும் வீடியோ வைரலாகி வருகிறது.
ஜனவரி 29 அன்று ஃபேஸ்புக் பயனர் டான் மெங்லி பகிர்ந்துள்ள இரண்டு வீடியோக்களில் இந்த அழகிய தருணம் படமாக எடுக்கப்பட்டு பகிரப்பட்டுள்ளது.
பணிப்பெண் கல்யாணம் செய்து கொள்வதற்காக சொந்த ஊருக்கு கிளம்பியதாக சொல்லப்பட்டுள்ளது.
வீட்டின் முதலாளி, அவரின் மூன்று பிள்ளைகளும் பணிப்பெண்ணை கட்டிப் பிடித்து அவரை பிரிய மனமில்லாமல் கதறியழும் காட்சிகள் நமக்கே கண்ணீரை வரவழைக்கிறது.
Video: https://www.facebook.com/mengli.tan/posts/5837492993007673
நான்கு வாகனங்கள் மோதி விபத்து: வெளிநாட்டு ஊழியர்கள் உள்ளிட்ட 8 பேர் மருத்துவமனையில் அனுமதி