யுஷுனில் பேருந்து மற்றும் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் 18 வயது சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் நேற்று ஜூலை 12 ஆம் தேதி மாலை 5:55 மணியளவில் யுஷுன் அவென்யூ 2 மற்றும் யுஷுன் ரிங் ரோடு சந்திப்பில் நடந்தது.
வெளிநாட்டு ஊழியர்கள் அதிக அளவில் வேண்டும்… 6 நிறுவனங்களுக்கு சிறப்பு அனுமதி
மாலை 5:55 மணியளவில் பேருந்து மற்றும் சைக்கிள் விபத்துக்குள்ளானதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததாக தெரிவித்தனர்.
மேலும், விபத்தில் சிக்கிய சைக்கிள் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை துணை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
இந்நிலையில், கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதற்காக 37 வயதான பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.
சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்