தேசிய தின அலங்காரங்களுக்கு தீ வைத்த நபர் – கைது செய்த போலீஸ் !

Burn Flag

ஆகஸ்ட் 10 ஆம் தேதி மதியம் 1:30 மணியளவில் 115A கான்பெர்ரா வாக் சுற்றி ஒரு நபர் தேசிய தினத்திற்கு வைக்கப்பட்ட அலங்காரங்களை எரிக்கிறார் என்று காவல்துறைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

விசாரணைகள் மேற்கொண்டதில் போலீஸ் கேமராக்களில் இருந்து பெறப்பட்ட புகைப்படங்களைப் பயன்படுத்திய போலீசார் ஆறு மணி நேரத்திற்குப் பின் அந்த நபரைக் கைது செய்தனர். இதையடுத்து 39 வயதான அவர் மீது ஆகஸ்ட் 12ம் தேதி நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

அந்த நபர் நான்கு கொடிகளையும் சில அலங்காரங்களையும் எரித்ததாக நீதிமன்ற ஆவணங்கள் வெளியிட்டுள்ளது. மேலும் அவர் அந்த நேரத்தில் குடிபோதையில் இருந்ததாகவும் சந்தேகிக்கப்படுகிறது. சந்தேகிக்கப்பட்டது  நிரூபிக்கப்பட்டால், அவருக்கு மேலும் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வேண்டுமென்றே சொத்துக்களை சேதப்படுத்துபவர்களுக்கு எதிராக காவல்துறை சகிப்புத்தன்மையைக் கொண்டிருக்காது என்றும் அவர்கள் சட்டத்தின்படி கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்றும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.