தந்தைக்கு ஆதரவாக மற்றொரு நபரை தாக்கிய ஆடவர்; உதிரம் சொட்ட சொட்ட சண்டை

Photo : Singapore Police

சோவா சூ காங்கில் உள்ள பிளாக் 141 டெக் வே லேனின் உள்ள திறந்தவெளியில் புதன்கிழமை மாலை (ஆகஸ்ட் 3) சண்டை நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

சண்டை நடப்பது குறித்து அன்று இரவு 8.02 மணிக்கு போலீசாருக்கு புகார் வந்ததாக அவர்கள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்யிடம் தெரிவித்தனர்.

சிங்கப்பூரில் குரங்கம்மையால் புதிதாக பாதிக்கப்பட்ட ஆடவர்… மற்றொரு நோயாளியுடன் தொடர்பு – MOH ரிப்போர்ட்

இதில் 37 வயதான ஆண் ஒருவர் சுயநினைவுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

மேலும், இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட 18 முதல் 45 வயதுக்குட்பட்ட மூன்று ஆண்கள் மற்றும் 25 வயதுடைய பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.

இதில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக இங் டெங் போங் பொது மருத்துவமனைக்கு SCDF உதவியுடன் கொண்டு செல்லப்பட்டார்.

பாதிக்கப்பட்டவரின் உடலின் மேல் பகுதியில் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

முதலில் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவரின் மகன் தான் இதில் தாக்குதல் நடத்தியவர் என நம்பப்படுவதாக ஷின் மின் டெய்லி நியூஸ் தெரிவித்துள்ளது.

தனது தந்தைக்கு ஆதரவாக அவர், பாதிக்கப்பட்டவரை கத்தியால் தாக்கியதாக நம்பப்படுகிறது.

கால்வாயில் கிடந்த ஆடவர் சடலம்… கண்டெடுத்த அதிகாரிகள் – யார் அந்த ஆடவர்?