உட்லண்ட்ஸில் பேருந்தில் சென்ற பெண்ணிடம் தவறாக நடந்துகொண்ட நபர் கைது

SMRT/Twitter

உட்லண்ட்ஸில் பெண்ணிடம் தவறாக நடந்துகொண்ட சந்தேகத்தின் பேரில் 43 வயதுமிக்க ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உட்லண்ட்ஸ் அவென்யூ 2 வழியாக பேருந்தில் ஏறிய பெண்ணிடம் அடையாளம் தெரியாத ஆடவர் மானபங்கம் செய்ததாக கூறப்படுகிறது.

சிங்கப்பூரில் அதிகம் மோசடி செய்யப்படும் வெளிநாட்டு ஊழியர்கள் – மோசடி எண்ணிக்கை அதிகரிப்பதாக தகவல்

இந்த சம்பவம் குறித்து கடந்த அக்டோபர் 5 அன்று இரவு 10.45 மணிக்குத் தங்களுக்குத் தகவல் வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

அதனை அடுத்து ஆடவரின் அடையாளத்தை கண்டுபிடித்த அதிகாரிகள், கடந்த அக்டோபர் 13 அன்று அவரை கைது செய்தனர்.

மானபங்கம் தொடர்பான குற்றத்திற்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம், பிரம்படி அல்லது அத்தகைய தண்டனைகள் கலவையாகவும் விதிக்கப்படலாம்.

போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.

புங்கோலில் வாள் வீசி பொதுமக்களை அலறடித்த ஆடவர் – கடைசியில் நடந்த ட்விஸ்ட்