கெலாங் பகுதியில் ஆயுதம்கொண்டு தாக்குதல்: 26 வயது நபர் கைது

கெலாங் பகுதியில் ஆடவரை கத்தரிக்கோல் கொண்டு தாக்கியதாகக் கூறப்படும் 26 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார்.

Aljunied Road மற்றும் Lorong 22 Geylang பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டதாக சிங்கப்பூர் காவல் படை (SPF) தெரிவித்தது.

30 வயதுடைய ஆடவரை அந்த நபர் கத்தரிக்கோலால் தாக்கியதாக SPF செய்தி வெளியீட்டில் தெரிவித்தது.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவரின் கைகள் மற்றும் தொடையில் காயங்கள் ஏற்பட்டுள்ளன.

மேலும் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது சுயநினைவுடன் இருந்தார். தற்போது அவர் உடல்நிலை நன்றாக உள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

ஆபத்தான ஆயுதங்கள் கொண்டு தானாக முன்வந்து காயப்படுத்திய குற்றத்திற்காக 26 வயதான அவர் மீது நேற்று சனிக்கிழமை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.