புக்கிட் மேரா குடியிருப்பில் 61 வயது முதியவர் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
வீட்டில் துர்நாற்றம் வீசியதை அக்கம்பக்கத்தினர் கவனித்ததை அடுத்து சடலம் கண்டெடுக்கப்பட்டது.
சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் 3 மணிநேரம் முன்னதாகவே உடைமைகளை வைக்க சிறப்பு அம்சம்
கடந்த டிசம்பர் 17 அன்று மதியம், பிளாக் 128 புக்கிட் மேரா வியூவில் உள்ள வீட்டில் சடலம் மீட்கப்பட்டது.
இவரின் இளைய சகோதரர்கள் திருமணம் செய்துகொண்டு வேறு இடங்களுக்கு சென்றதாகவும், அதன் பிறகு அந்த முதியவர் தனியாக வாழ்ந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
அவரின் பெற்றோர் இறந்துவிட்டதாகவும் அக்கம்பக்கத்தினர் ஒருவர் தெரிவித்தார்.
இந்த மரணத்தில் சதிச்செயல் ஏதும் இருப்பதாக போலீசார் சந்தேகிக்கவில்லை.
விசாரணைகள் நடந்து வருகின்றன.
சிங்கப்பூர் டோட்டோ (Toto) டிரா: முதல் பரிசுத் தொகை S$10 மில்லியன் – வெற்றி பெற கடும் போட்டி