கெப்பல் பேயில் உள்ள மெரினா நீரில் இருந்து 50 வயது மதிக்கத்தக்க ஆடவர் சடலம் ஒன்று நேற்று (ஆக.22) காலை மீட்கப்பட்டது.
சடலத்தின் புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்ட ஸ்டாம்ப் வாசகர், இறந்தவர் படகு ஓட்டுபவர் என்று கூறினார்.
சிங்கப்பூரில் செப். 1-ம் தேதி பொது விடுமுறை நாள் – அனைத்து ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை
ஆனால் இந்த சம்பவம் எப்படி நடந்தது என்று தனக்குத் தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
மெரினாவில் உள்ள ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளால் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் வாசகர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) நேற்று காலை 8.40 மணிக்கு 2 கெப்பல் பே விஸ்டாவில் உதவி வேண்டி அழைப்பு வந்ததாகக் கூறியது.
பின்னர் விரைந்து சென்ற SCDF படையின் துணை மருத்துவர்கள், ஆடவர் இறந்ததை உறுதி செய்தனர்.
முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், இந்த மரணத்தில் எந்தவித முறைகேடும் நடந்ததாக சந்தேகிக்கவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.
விசாரணைகள் நடந்து வருகின்றன.
சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்