சிங்கப்பூரில் இருந்து புதுக்கோட்டை வந்தவருக்கு திடீர் சிக்கல் – அவசர அவசரமாக அழைத்துச் செல்லும் அதிகாரிகள்!

27 people monitoring in Trichy corona ward
27 people monitoring in Trichy corona ward

சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த வாலிபருக்கு, குரங்கு அம்மை நோய் அறிகுறி கண்டறியப்பட்டது.

உடனே புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளத்தைச் சேர்ந்த, 35 வயது வாலிபர் கடந்த, 28ம் தேதி, சிங்கப்பூரில் இருந்து, ஸ்கூட் விமானத்தில் திருச்சி வந்தார்.

அவருக்கு விமான நிலையத்தில் பரிசோதனை மேற்கொண்ட போது, குரங்கு அம்மை நோய்க்கான அறிகுறி இருந்துள்ளது.

தொடர்ந்து, திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் பின் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவரது ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு, புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் குரங்கு அம்மை பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தமிழகம் வந்த பயணிக்கும் அறிகுறி தென்பட்டு இருப்பது இதன் தீவிரத்தை உணர்த்தி உள்ளது.