24 ஆண்டுகளாக போலியான பெயர் மற்றும் முகவரி கொண்ட பாஸ்போர்ட் பயன்படுத்தி வந்த பயணி சிக்கினார்.!

A Man caught at Madurai airport with fake passport for 24 years.

போலியான பெயர் மற்றும் முகவரியுடன் பாஸ்போர்ட் பயன்படுத்தி வந்த பயணி ஒருவர் சிங்கப்பூரில் இருந்து மதுரை செல்லும் போது மதுரை விமான நிலையத்தில் சிக்கினார்.

இவர் 24 ஆண்டுகளாக இந்த போலி பாஸ்போர்ட்டை பயன்படுத்தி வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சிங்கப்பூரில் இருந்து ராமசாமி என்ற பெயரில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் மதுரை வந்த அவரை குடியுரிமை பிரிவு அதிகாரிகள் பிடித்து விசாரணை செய்தனர்.

இதில் பல திடிக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர் பாஸ்போர்ட் எடுக்கும் போதே தவறான பெயர் மற்றும் முகவரியை பயன்படுத்தியதாகவும், அந்த பாஸ்போர்ட்டை சுமார் 24 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்ததாகவும் விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளார்.

ராமசாமியின் உண்மையான பெயர் பொன்னம்பலம் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர் .

இந்த செய்தி சிங்கப்பூர் தமிழ் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.