Boulevard சென்ட்ரல் கிராஸ் ஸ்ட்ரீட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 27) நடந்த விபத்திலிருந்து தப்பி ஓடிய நபர் வீடியோவில் சிக்கினார்.
அன்று காலை 11.20 மணியளவில் நான்கு கார்கள் விபத்துக்குள்ளானதாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
வெளிநாட்டு ஊழியர்கள் இருவரின் மரணத்துக்கு காரணமாக இருந்த இந்திய ஊழியருக்கு தண்டனை
இதனை அடுத்து 10 வயது சிறுவனும், 11 வயது சிறுமியும் சுயநினைவுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்று போலீசார் தெரிவித்தனர்.
வீடியோவில், சாலையில் ஒருவர் ஓடத் தொடங்குவதைக் காணலாம். அவரை துரத்த மற்றொருவர் சாலைத் தடுப்புச் சுவரில் குதித்து ஓடியதையும் காண முடிந்தது. இருவரும் கருப்பு உடை அணிந்திருந்தனர்.
வீடியோவை வைத்து பார்க்கையில் வாகனம் சாலைத் தடுப்புச் சுவரில் மோதியதாகத் தெரிகிறது.
இது குறித்து விசாரணைகள் தொடர்வதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
வெளிநாட்டு ஊழியர்கள் உஷார்: பாதுகாப்புடன் இருங்கள்… குறிப்பாக work permit ஊழியர்கள்