தனது மனைவியைக் கொலை செய்ததாக கணவர் மீது குற்றச்சாட்டு – குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை விதிக்கப்படலாம்!

வெளிநாட்டு ஊழியரை

அங் மோ கியோ ஸ்ட்ரீட் 23இல் உள்ள வீட்டில் தனது மனைவியைக் கொலை செய்ததாக சந்தேகத்தின்பேரில் 33 வயது ஆடவர் நேற்று (ஜனவரி 11) கைது செய்யப்பட்டார்.

அன்று காலை 7.35 மணியளவில் மேற்கண்ட முகவரியில் கத்தியால் குத்தப்பட்ட வழக்கு குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

விதிமுறைகளை மீறியதாக KFC கடை நிர்வாகம் மீது குற்றச்சாட்டு

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வீட்டுக்குள் அசையாமல் கிடந்த 30 வயதான பெண்ணை கண்டனர், மேலும் அவர் சம்பவ இடத்திலேயே அவர் இறந்துவிட்டது உறுதி செய்யப்பட்டது.

மேலும், 33 வயதான ஆடவர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். முதற்கட்ட விசாரணையில் அந்த ஆணும் பெண்ணும் திருமணமானவர்கள் என தெரியவந்துள்ளது.

அந்த ஆடவர் மீது இன்று புதன்கிழமை கொலைக் குற்றம் சாட்டப்படும்.

விசாரணைகள் நடந்து வருகின்றன.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.

விடுதியில் தகராறு: இறந்த தன் தாயை அவமானப்படுத்திய வெளிநாட்டு ஊழியரை குழவி கல்லால் தாக்கிய சக ஊழியருக்கு சிறை