பெண்ணிடம் ஆயுதத்தை பயன்படுத்தி கொள்ளையடிக்க முயற்சி – ஒருவர் கைது

man charged robbery attempt attacking woman
Shin Min Daily News

சிங்கப்பூர்: 64 வயதான பெண்ணிடம் ஆயுதத்தை பயன்படுத்தி கொள்ளையடிக்க முயன்றதாக 24 வயது ஆடவர் மீது சனிக்கிழமை (நவம்பர் 12) குற்றம் சாட்டப்பட்டது.

மவுண்ட்பேட்டன் சாலையில் உள்ள ஓவர்ஹெட் பாலத்தில், ஷம்ஷேர் சிங் என்ற அவர் கடந்த வியாழக்கிழமை இரவு 8.30 மணியளவில் அந்தப் பெண்ணைத் தாக்கி கொள்ளையடிக்க முயன்றதாக கூறப்படுகிறது.

“300க்கு மேற்பட்ட விலங்கினங்கள்… எழில் கொஞ்சும் அழகு” – சிங்கப்பூரில் திறக்கப்பட்டுள்ள ரைபிள் ரேஞ்ச் இயற்கைப் பூங்கா

பெண்ணை மடக்கி பிடித்து அவரின் வாயை மூடிக்கொண்டு, கழுத்து மற்றும் முன்கைகளை ரேஸர் பிளேடு வைத்து தாக்கியதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அவருக்கு கடுமையான காயம் ஏற்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னர் அந்த பெண் சுயநினைவுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்த சம்பவத்தில் அந்தப் பெண்ணுக்கு எந்தவித பண இழப்பும் ஏற்படவில்லை என்றும், அவரது உடல் நிலை நன்றாக இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

சிங்கப்பூரில் கனமழை: தானா மேரா MRT நிலையம் முன் வெள்ளப்பெருக்கு – கட்டுமான தள ஊழியர்கள் உதவி