இங்கிலாந்து நாட்டிற்க்கு விடுமுறைக்கு சென்ற 50 வயதான சிங்கப்பூர் ஆடவர் நியூகேஸில் அடுக்குமாடி விடுதியில் தனது 51 வயது மனைவியை படுகொலை செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக, ஃபோங் சூங் ஹெர்ட் என்ற அந்த சிங்கப்பூர் ஆடவர் மார்ச். 18 அன்று நியூகேஸில் கிரவுன் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
சிங்கப்பூரில் பணிபுரிந்த தமிழக ஊழியர் மீது மனைவி கொடுத்த புகார் – கைது செய்த போலீஸ்!
அங்கு அவர் முன்கூட்டியே திட்டமிடாத இந்த கொலை குற்றத்தை ஒப்புக்கொண்டார் என்று பிபிசி தெரிவித்துள்ளது.
மேலும் நியூகேஸில், வெஸ்ட்கேட் சாலையில் அமைந்துள்ள County Aparthotelலில் தனது மனைவியைக் கொலை செய்த குற்றச்சாட்டை அவர் மறுத்தார்.
ஃபோங் தற்போது ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளார், மேலும் வீடியோ இணைப்பு மூலம் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
மீண்டும் இது தொடர்பான விசாரணை வரும் ஜூன் 6ம் தேதி நடைபெறும்.
பிரிட்டனில் இதுபோன்ற கொலைக் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
லிட்டில் இந்தியாவில் சட்டவிரோத செயல்: ரகசிய கோட் வேர்ட்…ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!