கட்டிட உயரத்தில் இருந்து கீழே விழுந்த வெளிநாட்டு நபர் மரணம்

Man dies after falling from height at Tiong Bahru Plaza
Shin min daily

தியோங் பாரு பிளாசா கட்டிட உயரத்தில் இருந்து கீழே விழுந்த வெளிநாட்டு நபர் ஒருவர் உயிரிழந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த நபருக்கு 20 அல்லது 30 வயதுக்குள் இருக்கும் என்றும், அவர் சீன வம்சாவளியைச் சேர்ந்தவர் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஜன. 27 அன்று மதியம் 3:00 மணியளவில் 302 தியோங் பாரு சாலையில் உதவி வேண்டி அழைப்பு வந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) தெரிவித்தது.

அதன் பின்னர் விரைந்து வந்த SCDF அந்த நபரை சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு (SGH) கொண்டு சென்றது.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் இறந்து விட்டாரா என்பது குறித்த தகவல் தெரியவில்லை.

சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், பெரிய சத்தம் கேட்டதாகவும், பின்னர் நபர் ஒருவர் தரையில் கிடந்ததாகவும், மயக்க நிலையில் கடுமையாக மூச்சு விடுவதையும் அவர்கள் பார்த்ததாகவும் கூறினர்.

Video: https://www.facebook.com/watch/?v=1349577735839892