MRT ரயிலில் முகக்கவசம் அணியாமல் பயணியை தாக்கும் ஆடவர் – காணொளி

man-fight-mrt
Kuanyewism / FB

சமீபத்தில் MRT ரயிலில் இரண்டு ஆடவர்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டை வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இதனால் அச்சமடைந்த பயணிகள் தங்கள் இருக்கைகளை விட்டு எழுந்து செல்வதையும் காணொளிகளில் காணமுடிகிறது.

சிங்கப்பூரில் மாதாந்திர அடிப்படையில் அதிகபட்ச இறப்பு செப்டம்பர் மாதத்தில் பதிவு

பேஸ்புக்கில் வெளியிடப்பட்ட காணொளிகளில், முகக்கவசம் அணியாத சிவப்பு நிற சட்டை அணிந்த ஒருவர் சண்டையைத் தூண்டுவதாகத் தெரிகிறது.

இந்த சம்பவம், யியோ சூ காங் நிலையத்தை நோக்கிச் செல்லும், வடக்கு-தெற்கு ரயில் பாதையில் ஏற்பட்டுள்ளது.

சாம்பல் நிற சட்டை அணிந்தவர் அந்த ஆடவரின் தலையில் அடித்து அவர் தாக்கியதற்கு பதிலடி கொடுக்கிறார், அதனால் அவர் தரையில் விழுவதையும் காணமுடிகிறது.

இதனால் பயணிகள் பலர், அச்சத்தில் அவசர அவசரமாக அந்த இடத்தை விட்டு வெளியேறுகின்றனர்.

இந்நிலையில், மதர்ஷிப்பின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக, இதுகுறித்து புகார் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணைகள் நடந்து வருவதாகவும் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

இரண்டு நாட்களாக 13 வயது சிறுவனை காணவில்லை – தகவல் கேட்கும் காவல்துறை