புலாவ் உபின் கடற்பரப்பில் 42 வயது ஆணின் சடலம் ஒன்று கடந்த செவ்வாய்க்கிழமை (மார்ச் 14) அன்று கண்டெடுக்கப்பட்டது.
அவர் சிங்கப்பூரில் காணாமல் போனவர் என்று புகாரளிக்கப்பட்ட நபர் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர், அவர் தீவின் தென்மேற்கில் உள்ள ஜாலான் வாட்சியம் அருகே மூழ்கியதாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
சுமார் ஏழு மணி நேரம் தேடுதல் வேட்டை நடத்தியும் சடலத்தை கண்டுபிடிக்க முடியாத காரணத்தால் SCDF தேடுதல் பணியை நிறுத்தியது.
பின்னர் சடலம் மிதந்து வருவதாக ஒருவர் கொடுத்த புகாரின்பேரில் சடலம் கரைக்கு மீட்டு கொண்டுவரப்பட்டது.