பிளாக் 230E தெம்பனீஸ் ஸ்ட்ரீட் 24 இல் உள்ள வீட்டில் 48 வயதுடைய ஆடவர் ஒருவர் இறந்து கிடந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நேற்று முன்தினம் ஜூன் 22 ஆம் தேதி இரவு 8.51 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக ஸ்டாம்ப் கூறியுள்ளது.
கட்டுமான தளத்தில் விபத்து: கம்பியின் பகுதி, தொங்குமேடை இடிந்து விழுந்தது.. ஊழியருக்கு காயம்
அன்று மாலை 6.16 மணிக்கு அந்த பிளாக்கில் இருந்து இயற்கைக்கு மாறான மரணம் குறித்து தகவல் வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
அங்கு ஆடவர் அசையாமல் கிடந்தார் என்றும், மேலும் அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாகவும் SCDF துணை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில் இதில் சதிசெயல் ஏதும் சந்தேகிக்கவில்லை என்றும் போலீசார் கூறியுள்ளனர்.
விசாரணைகள் நடந்து வருகின்றன.
சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்