பலத்த சத்தத்துடன் 11வது மாடியில் இருந்து விழுந்த ஆடவர் – துணி காயப்போடும் ரேக்கில் சிக்கி மரணம்

Credit: Mothership reader

பிளாக் 38 லோரோங் 5 தோ பாயோ பிளாட்டின் கீழே உள்ள துணி காயப்போடும் ரேக்கில் 57 வயதுடைய ஆடவர் ஒருவர் இறந்து கிடந்தார்.

SCDF அதிகாரிகள் அந்த நபரை ரேக்கில் இருந்து மீட்டு எடுக்கும் காட்சியின் புகைப்படங்களை மதர்ஷிப் வெளியிட்டுள்ளது.

சிங்கப்பூரில் ஒரே தம்பதிக்கு பிறந்த 4 குழந்தைகளுக்கும் பிறந்த நாள் செப். 6 – வியக்கவைக்கும் குடும்பம்

அந்த ஆடவர் 11வது மாடியில் வசித்து வந்ததாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர்.

செப். 8, அன்று காலை 9 மணியளவில் பலத்த சத்ததுடன் கீழே விழுந்த அவர், பின்னர் வலியில் கதறியதாகவும் அங்கு வசிப்பவர் ஒருவர் கூறினார்.

அந்த ஆடவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக SCDF துணை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், இந்த சம்பவத்தில் எந்த சதியும் நடந்ததாக சந்தேகிக்கவில்லை. என போலீசார் கூறியுள்ளனர்.

இது குறித்த விசாரணைகள் நடந்து வருகிறது.

இந்திய ஊழியர்கள் உட்பட மூன்று வெளிநாட்டு ஊழியர்கள் மரணம்: உயிர்போக காரணமாக இருந்த 3 பேருக்கு சிறை