தூங்கிக் கொண்டிருந்த மனைவியின் சகோதரியை பலமுறை பாலியல் ரீதியாக துன்புறுத்திய ஆடவருக்கு சிறை

Photo: Getty

தூங்கிக் கொண்டிருந்தபோது தனது மனைவியின் சகோதரியை பலமுறை பாலியல் ரீதியாக துன்புறுத்திய ஆடவருக்கு இன்று (மார்ச் 25) 14 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதில் 28 வயதான அந்த ஆடவர், மூன்று பாலியல் துன்புறுத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகளில் குற்றத்தை ஒப்புக்கொண்டார், மேலும் இரண்டு குற்றச்சாட்டுகள் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன.

சிங்கப்பூரில் தளர்த்தப்படும் கட்டுப்பாடுகள் – ஊழியர்களுக்கு….

அந்த ஆடவர் தனது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினருடன் பிளாட் ஒன்றில் வசித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. சம்பவம் நடந்தபோது 25 வயதாக இருந்த அவரது மனைவியின் சகோதரியும் அங்கு வசித்து வந்துள்ளார்.

அவரது மனைவியின் தாத்தா பாட்டி பிளாட்டில் தங்கும்போது, பாதிக்கப்பட்ட பெண் சோபாவில் தூங்கி வந்துள்ளார்.

சிங்கப்பூரில் தளர்த்தப்படும் கட்டுப்பாடுகள் – வர்த்தக நிகழ்வுகளில்…

கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த சம்பவத்தில், சோபாவில் தூங்கிக் கொண்டிருந்த மனைவியின் சகோதரியிடம் மீண்டும் மீண்டும் அவர் தவறாக நடந்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் அறை கேமராவை சோதித்து பார்த்ததில், ​​தனது சகோதரியின் கணவர் தன்னிடம் தவறாக நடந்துகொள்வதை கண்டறிந்தார்.

பெண்ணிடம் தவறாக நடந்துகொண்ட குற்றச்சாட்டுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறை, அபராதம் விதிக்கப்படலாம், பிரம்படி விதிக்கப்படலாம்.

சிங்கப்பூரில் தளர்த்தப்படும் கட்டுப்பாடுகள் – தெரிந்து கொள்வோம்!