தோ பாயோ அருகே சாலையைக் கடக்கும்போது மோட்டார் சைக்கிள் மோதிய சம்பவத்தில் 82 வயது முதியவர் உயிரிழந்தார்.
மயக்க நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கு இறந்ததாக ஷின் மின் டெய்லி நியூஸ் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் அக்.2 ஆம் தேதி மாலை, பிளாக் 163 லோரோங் 1 தோ பாயோ அருகே நடந்தது குறிப்பிடத்தக்கது.
திங்கள்கிழமை இரவு 7:20 மணியளவில் மேற்கூறிய இடத்தில் நடந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததை சிங்கப்பூர் காவல்துறை உறுதிப்படுத்தியது.
மோட்டார் சைக்கிள் ஓட்டிச் சென்ற 27 வயதுமிக்க ஆடவர் சுயநினைவுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
இது குறித்த போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.