மனைவி தவறான நிலையில் இருக்கும் அந்தரங்கப் படத்தை ஃபேஸ்புக்கில் வெளியிட்ட ஆடவருக்கு சிறை

3 மாணவிகளிடம் தகாத முறையில் நடந்துகொண்ட ஆடவருக்கு சிறை
Representational Image (Photo: iStock)

தன்னுடைய மனைவி, மேற்பார்வையாளருடன் உடலுறவு கொள்ளும் படத்தை பேஸ்புக்கில் வெளியிட்டதற்காக 27 வயது ஆடவருக்கு 13 வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

மனைவியின் தொலைபேசியைத் திருடி, அந்தப் படங்களை அவர் தனது கைபேசியில் பதிவேற்றிக்கொண்டதாக கூறப்படுகிறது.

சிங்கப்பூரில் கடுமையாகும் கட்டுப்பாடுகள்: VTL ஏற்பாடுகளில் வரும் அனைத்து பயணிகளுக்கும் புதிய நடைமுறை

அந்த ஆடவர், திருட்டு மற்றும் அந்தரங்கப் படத்தை வெளியிட்ட குற்றத்திற்காக செப்டம்பர் மாதம் குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவரின் தண்டனையில் மேலும் இரண்டு குற்றச்சாட்டுகள் பரிசீலிக்கப்பட்டன.

நடந்தது என்ன ?

இந்த தம்பதியினர் விவாகரத்து செய்துள்ளனர் என்பதும் கூடுதல் தகவல். கடந்த ஆண்டு பிப்ரவரியில் குற்றங்கள் நடந்தபோது, ​​​​அவர் மனைவியிடம் இருந்து பிரிந்து வீட்டை விட்டு வெளியேறினார்.

பிப்ரவரி 6, 2020 அன்று, மனைவியின் வீட்டிற்குச் சென்ற ஆடவர், அவருடைய தொலைபேசியை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடினார்.

அபோது கைபேசியில் இருந்த பல நெருக்கமான படங்கள் மற்றும் வீடியோக்களைக் கண்டுபிடித்து, அதனை தனது கைபேசியில் பதிவேற்றிக்கொண்டதாக கூறப்படுகிறது.

மனைவின் கைபேசியில், முழு நிர்வாண காணொளி மற்றும் அவரது பணி மேற்பார்வையாளருடன் உடலுறவு கொள்ளும் படம் ஆகியவை இருந்தன.

அந்த நபர் பின்னர் மனைவியிடம் கைபேசியை திருப்பித் தந்தார், ஆனால் அதில் இருந்த காட்சிகளைப் பற்றி மனைவியிடம் சொல்லவில்லை.

அதனை தொடர்ந்து, பிப்ரவரி 12, 2020 அன்று காலை 8 மணியளவில், அவர் தனது மனைவியின் அந்தரங்கப் படங்களை ஃபேஸ்புக்கில் வெளியிட்டார்.

பின்னர், அந்த பதிவு தீயாக பரவியது, இந்நிலையில் அவருக்கு 13 வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்திய வம்சாவளி ஆடவரின் தூக்கு தண்டனை வழக்கு – சிங்கப்பூர் கூறுவதென்ன?